மேலும்

யோசித ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவு

Yoshitha-Rajapaksaகடற்படைத் தளபதியின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக, லெப்.யோசித ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி, சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு, பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது. அதிபர் செயலகத்துடன் இணைக்கப்பட்டிருந்த லெப்.யோசித ராஜபக்ச, கடற்படைத் தளபதியின் அனுமதியின்றி, பல்வேறு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார்.

இந்த வெளிநாட்டுப் பயணங்களின் போது, கடற்படைத் தளபதியிடம், வாய்மூலமோ, எழுத்து மூலமோ லெப்.யோசித ராஜபக்ச அனுமதி கோரவில்லை.

அத்துடன் இதுபற்றி தனது நேரடி மேலதிகாரிகளிடமும் தகவல் தெரிவிக்கவில்லை என்பது கடற்படை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடற்படையின் உள்ளக விசாரணையில், லெப்.யோசித ராஜபக்ச தவறிழைத்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை அறிக்கையை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியிருந்தது.

தற்போது பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து கடற்படைத் தளபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தரவில், கடற்படையின் சட்டம், மற்றும் ஒழுங்குமுறைகளை மீறிய குற்றச்சாட்டுத் அதொடர்பாக லெப்.யோசித ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *