சிங்கப்பூரில் இருந்து மன்னார் திரும்பினார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை நேற்று பிற்பகல் மன்னார் ஆயர் இல்லத்துக்குத் திரும்பினார்.
கடந்த மே மாதம் கொழும்பு சென்ற கொண்டிருந்த போது, பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த ஆயர், நேற்றுக்காலை விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அங்கிருந்து அவர் சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி மூலம் மன்னார், தள்ளாடி இராணுவத் தளத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
அதையடுத்து நோயாளர் காவுவண்டி மூலம் மன்னார் ஆயர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.