இந்தியாவுடன் சீபா உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடாது – ரணில் அறிவிப்பு
இந்தியாவுடன் சீபா எனப்படும், விரிவான பொருளாதார பங்குடமை உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், சீபா அல்லது அதுபோன்ற வேறு எந்தப் பெயர்களிலான உடன்பாட்டையும் இந்தியாவுடன் செய்து கொள்ளமாட்டோம்.
இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தும் உடன்பாடு ஒன்று தான் கையெழுத்திடப்படவுள்ளது.
இதன் மூலம், இந்திய துறைசார் வல்லுனர்கள் சிறிலங்காவில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படாது.
உடன்பாட்டை சேவைகளை உள்ளடக்குவதற்கு சிறிலங்கா எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. அதனை நீக்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.