மேலும்

விமானங்களுக்குள் தஞ்சமடைந்த பாம்புகள் – சென்னை விமான நிலையம் திறக்கப்படுவது தாமதம்

chennai-airport-flood (4)பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகருக்கான விமான சேவைகள் வரும் 8ஆம் நாள் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கன் விமானசேவை அறிவித்துள்ளது.

சென்னையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கை அடுத்து சென்னை விமான நிலையம்  மூடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் தேங்கியிருந்த வெள்ளநீர் வடிந்ததையடுத்து, இன்று விமான சேவைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்க விமான நிலைய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், திட்டமிட்டவாறு விமான சேவைகளை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்களில், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகள் மற்றும் விச உயிரினங்கள் புகுந்துள்ளன.

இதனால், அனைத்து விமானங்களையும் முழுமையாக சோதனையிட்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், சென்னை விமான நிலையத்தை மீளத் திறக்கும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கொழும்பில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் நாளை மற்றும் நாளை மறுநாள் இடம்பெறாது என்று சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *