இந்தியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்
பூகோள காலநிலை மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாரிசில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். பூகோள காலநிலை மாநாட்டின் போதே நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறுகிய நேரம் இடம்பெற்ற மரியாதை நிமித்தமான சந்திப்பே இது என்றும், எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, மோல்டாவில் நடந்த கொமன்வெல்த் உச்சி மாநாடு மற்றும் பாரிசில் நடந்த பூகோள காலநிலை மாநாடு ஆகியவற்றில் பங்குபற்றி விட்டு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் கொழும்பு திரும்பியுள்ளார்.