மேலும்

போர்க்குற்றங்களுக்கு உயர்மட்டப் படை அதிகாரிகளே பொறுப்பு – சந்திரிகா குமாரதுங்க

cbkபோருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது, உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மீதே பொறுப்புக்கூற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பணியகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர்,

”பொறுப்புக்கூறும் செயல்முறைகள் இந்தமாதம் அல்லது அடுத்த மாதம் ஆரம்பமாகும்.

போர்க்குற்ற விசாரணையின் பின்னர், கீழ்மட்டப் படையினர் துரத்தியடிக்கப்படமாட்டார்கள். ஆனால் பிரதான கட்டளை அதிகாரிகளே அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

உள்நாட்டுப் பொறிமுறைக்குத் தேவையான வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக் கொள்ளும். ஆனால், வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை.

இது நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்கான பொன்னான வாய்ப்பாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *