மேலும்

பாரிஸ் பூகோள காலநிலை மாநாட்டில் சிறிலங்கா அதிபர்

ms-parisபூகோள காலநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா பிரதமர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிசை சென்றடைந்துள்ளார்.

நேற்றுக்காலை பாரிஸ் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இன்று ஆரம்பமாகும் பூகோள காலநிலை மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலகின் 137 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

ms-paris

இந்த மாநாட்டின் பக்க நிகழ்வாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சேர்பிய அதிபருடன் இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அதேவேளை, பிரெஞ்சு அதிபர் ஹொலன்டே ளிக்கும் மதியபோசன விருந்துபசாரத்திலும் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.

அதேவேளை, அண்மையில் தீவிரவாத தாக்குதலுக்குள்ளான பாரிசில் உலகத் தலைவர்கள் குவிந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், சிறிலங்கா அதிபர் நேற்று புலம்பெயர் இலங்கையர்களுடன் நடத்தவிருந்த சந்திப்பும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *