மேலும்

வரவுசெலவுத் திட்ட உரையின் போது தூங்கிவழிந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்

parliament-sleeping (1)சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட உரையை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தூக்கிக் கொண்டிருந்ததை வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய வரவு செலவுத் திட்ட உரை மாலை 6.24 வரை தொடர்ந்தது. தேநீர் இடைவேளை கூட விடப்படாமல், நான்கரை மணிநேரம் அவரது உரை இடம்பெற்றது.

parliament-sleeping (1)

parliament-sleeping (2)parliament-sleeping (3)parliament-sleeping (4)parliament-sleeping (5)parliament-sleeping (6)parliament-sleeping (7)parliament-sleeping (8)

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் தேநீர் விருந்துக்குத் தயார்படுத்தப்பட்டிருந்த போதும், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இடைவிடாமல் ததனது உரையை நிகழ்த்திக் கொண்டிருந்ததால் சபைக்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு இராஜதந்திரிகள், அதிகாரிகளும் தூங்கி வழிந்தனர்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தூங்கி வழிந்ததையும், கொட்டாவி விட்டுக் கொண்டிருந்ததையும் காட்டும், ஒளிப்படங்களை வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஒளிப்படங்கள் – வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *