கொழும்பு வந்தார் சமந்தா பவர் – விமான நிலையத்தில் காத்திருந்து வரவேற்றார் மங்கள
ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் மூன்று நாள் பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்தார். புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த, சமந்தா பவரை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வரவேற்றார்.
சமந்தா பவரை வரவேற்க, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார்.
கொழும்பு வந்து சேர்ந்த சமந்தா பவர், இன்று மாலை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன், இராப்போசன விருந்துடன் கூடிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
நாளை காலை அவர் யாழ்ப்பாணம் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.