மேலும்

சிறிலங்கா படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சியளிக்கவில்லை – இந்திய பாதுகாப்பு அமைச்சர்

Manohar-Parrikarசிறிலங்காப் படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சிகள் அளிக்கப்படவில்லை என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் குன்னூரில் உள்ள  பாதுகாப்பு அதிகாரிகள் கல்லூரிக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் நேற்று பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, செய்தியாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், சிறிலங்கா படையினருக்கு இந்தியா தொடர்ந்தும் பயிற்சிகளை அளித்து வருகிறது.

பல்வேறு இடங்களிலும் சிறிலங்கா படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு எந்தப் பயிற்சியும் அளிகக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் சிறிலங்கா படைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுவதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தியதையடுத்தே, இங்கு பயிற்சிகள் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *