மேலும்

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்க – சிறிலங்கா கடற்படைகள் பேச்சு

us-sl-navy-talks (1)இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் கடல்சார் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பாக சிறிலங்கா – அமெரிக்க கடற்படைகளுக்கு இடையில் உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

கொழும்பில் உள்ள சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பேச்சுக்களில் சிறிலங்கா தரப்பில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவும், அமெரிக்க கடற்படையின் சார்பில், மரைன் படைப்பிரிவின் மேற்குப் பிராந்திய நிலையங்களுக்கான கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் எட்வேர்ட் டி பான்ராவும் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சுக்களில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக பிரதி பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்கப் இங்லிசும் கலந்து கொண்டார்.

us-sl-navy-talks (1)us-sl-navy-talks (2)us-sl-navy-talks (3)

பரஸ்பர ஈடுபாடுள்ள இருதரப்பு விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

கடல்சார் பாதுகாப்பு, தேடுதல், மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும், கடற்படையினருக்குப் பயிற்சி அளிப்பது தொடர்பாகவும், முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், அமெரிக்க – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் பாதுகாப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *