153 பேர் கொல்லப்பட்ட பாரிஸ் தாக்குதல் – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதலில், குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை என்று, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்றிரவு பாரிஸ் நகரில் ஏழு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள், மற்றும் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல்களில் 153 பேர் வரை மரணமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தாம் தாக்குதல் நடத்தியதாக ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்.
இந்த நிலையில், பாரிஸ் தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என்றும், எனினும் அங்குள்ள சிறிலங்கா தூதரகம் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், சிறிலங்கா வௌிவிவகார அமைச்சு ருவிட்டரில் பதிவிட்டுள்ளது.