மேலும்

வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலை – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை

sampanthanவடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இரா.சம்பந்தன், ”வேலையின்மை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவதாக எமது கல்வி முறை அமையவில்லை. அதனால், வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் ஒரு கல்வி முறை அவசியம் தேவை.

வேலைவாய்ப்பின்மை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்னேன்.

அவர் இந்த விவகாரத்துக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை மட்டும் கவனிக்காமல், தெற்கிலுள்ள பிரச்சினையையும் கவனத்தில் கொள்வதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நன்றி தெரிவித்தார்.

ஒரு கருத்து “வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலை – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை”

  1. மனோ says:

    ஐயோ ! ஐயோ, நீங்களும் இதை நிஜம் என்று நம்பிட்டீங்களா? சொல்ல இல்லை! ஹிஹிஹீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *