மேலும்

சீனாவின் உறவு சிறிலங்காவுக்கு முக்கியம் – அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன

Srilanka-chinaசீனாவுடன் வலுவான உறவுகளை பேணிக்கொள்வது மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவின், நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “உலகில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த நாடுகள் சில, சீனாவுடன் நெருக்கமான இருக்க வேண்டிதன் தேவையைப் புரிந்து கொண்டுள்ளன.

சீனாவின் உறுதியான பொருளாதாரம், சிறிலங்கா உள்ளிட்ட இந்தப் பிராந்தியத்துக்கே முக்கியமானது.

பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து, சீன முதலீட்டாளர்கள் அதிகளவில் சிறிலங்காவுக்கு அழைக்கப்பட வேண்டும்.

சீனாவுடனான உறவுகளை விரிவாக்கிக் கொள்வது, சிறிலங்காவுக்கு முக்கியமானது.

முன்னர், சீனாவிடம் இருந்து தூர விலகியிருந்த பிரித்தானியா, இப்போது, அதனுடன் நெருக்கமாகியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *