தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் வெளியே கசியாது – ருவான் விஜேவர்த்தன
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 11 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டு விடாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.