மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் குறித்து விசாரிக்க புதிய குழு

ranil-japanநாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் தொடர்பாக விசாரிக்க, நாடாளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றச் சட்டங்கள் மற்றும் வசதிகளின் கீ்ழ், இந்த விசாரணைக் குழுவை நியமிக்க சிறிலங்கா பிரதமர் முடிவெடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொலைகள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்துக் கவனிக்கவே இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த போது படுகொலை செய்யப்பட்ட, தி.மகேஸ்வரன், ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், டி.எம்.தசநாயக்க, ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே ஆகியோரின் கொலைகள் தொடர்பாகவே இந்த நாடாளுமன்றக் குழு விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொலைகள் தொடர்பாக விசாரிக்கும், காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்தக் குழு விசாரிக்கும்.

சிறிலங்காவில் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தி.மகேஸ்வரன், ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், டி.எம்.தசநாயக்க ஆகியோரின் கொலைகள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து, அனைத்துலக நாடாளுமன்ற அமைப்பு சிறிலங்கா அரசாங்கத்திடம் அண்மையில் விளக்கம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *