ஐ.நா பொதுச்செயலரின் விருந்துபசாரத்தில் மைத்திரி – ஒபாமா சந்திப்பு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று முதல்முறையாகச் சந்தித்துப் பேசினார்.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் வந்துள்ள வெளிநாட்டுத் தலைவர்களுக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்று ஐ.நா தலைமையகத்தில் விருந்துபசாரம் அளித்தார்.
இந்த விருந்தில் கலந்து கொண்ட போதே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் சந்தித்துக் கொண்டனர்.
கைலாகு கொடுத்து அறிமுகப்படுத்திக் கொண்ட இரு தலைவர்களும் சற்று நேரம் உரையாடினர்.
சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின்னர், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்திருப்பது இது வே முதல்முறையாகும்.