மேலும்

மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரைக் களத்தில் 50 முன்னாள் புலிகள்?

mahinda-rajapaksheஎதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளில், 50இற்கும் அதிகமான விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இவர்கள் எந்தவொரு புனர்வாழ்வு முகாமிலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாதவர்கள் என்றும், தகவல் வெளியாகியுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், சிறிலங்காவின் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவும், இணைந்தே, இவர்களை தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

அதேவேளை, இவர்களை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் சிறிலங்கா காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு ஈடுபட்டுள்ளதாகவும், கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *