லசந்த படுகொலை பிரதான சந்தேகநபருக்கு தாய்லாந்தில் இராஜதந்திரப் பதவி வழங்கிய கோத்தா
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச வெளிநாட்டில் இராஜதந்திரப் பதவியை வழங்கினார் என்று புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது.