இன்றிரவு அல்லது நாளை இரவு சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்றிரவு அல்லது நாளை இரவு கலைக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் வகையில், இன்றிரவு அல்லது நாளை இரவு நாடாளுமன்றத்தை சிறிலங்கா அதிபர் கலைக்கும் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்கும்படி, சிறிலங்கா அதிபருக்கு, ஐதேக கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.
அதேவேளை, முக்கிய கட்சிகள் அனைத்தும், நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.
முன்னதாக, நேற்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.