மேலும்

பெலியத்தையில் மகிந்தவுக்கு முடிவுகட்டுவேன் – ராஜித சேனாரத்னவின் மகன் சூளுரை

Chathura Senaratnaநாடாளுமன்றத் தேர்தலில் பெலியத்தை தொகுதியில் போட்டியிட முன் வருமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்குச், அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சவால் விடுத்துள்ளார்.

சுகததாச அரங்கில் நேற்றுமுன்தினம் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய, ராஜித சேனாரத்னவின் மகன், சதுர சேனாரத்ன,

‘முன்னாள் அதிபரின் அரசியல் வாழ்க்கையை அவர் ஆரம்பித்த இடத்திலேயே முடித்து வைப்பேன்.

பெலியத்தை தொகுதியில் தான் அவர் முதல் முதலாக மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

அதே தொகுதியில் போட்டியிட முன் வருமாறு அவருக்கு சவால் விடுகிறேன். நானும் கூட அங்கு போட்டியிடுவேன்.

அவர் அரசியலைத் தொடங்கிய இடத்திலேயே, அவரது அரசியல் வாழ்க்கையை முடித்து வைப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *