மேலும்

சிறிலங்கா நிதியமைச்சரின் தலை தப்புமா? – ஜூலை 6இல் தெரியும்

ravi-karunanayakeசிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் ஜூலை 6 ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக 100க்கும் அதிகமான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த மாதம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *