மேலும்

சிறிலங்காவின் கடலுணவுகளைக் குறிவைக்கிறது சீனா

சிறிலங்காவின் கடலுணவுகளை இறக்குமதி செய்வதற்கு சீனாவின் யுனான் மாகாணம் ஆர்வம் காட்டி வருவதாக மாகாண உதவி ஆளுனர் காவோ சூசன் தெரிவித்துள்ளார்.

”சீனாவில்- குறிப்பாக, யுனான் மாகாணத்தில் சிறிலங்கா கடலுணவுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

பங்களாதேஸ், மியான்மாரில் இருந்து கடலுணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும், சிறிலங்காவின் கடலுணவுப் பொருட்களுக்கு சீனாவில் வரவேற்பு அதிகம்.

இதையடுத்து சிறிலங்காவில் இருந்து பெருமளவில் கடலுணவுகளை யுனான் மாகாண அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளது.

தெற்காசிய நாடுகளுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதில் சீன உயர் முக்கியத்துவம் அளிக்கிறது.

தெற்காசியாவில் சீனா தனது முதலீடுகளை 30 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கவுள்ளது.

தெற்காசிய நாடுகளுக்கு 20 பில்லியன் டொலர் முன்னுரிமைக் கடன்களை அளிக்கவுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது சீன- தெற்காசிய எக்ஸ்போ மற்றும் 23வது குன்மிங்  இறக்குமதி, ஏற்றுமதி சந்தையின் ஆரம்ப ஊடகச் சந்திப்பிலேயே, சீனாவின் யுனான் மாகாண ஆளுனர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *