மேலும்

சுதந்திரக் கட்சியினர் நால்வர் பிரதி அமைச்சர்களாக நியமனம்

SLFPசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இவர்கள், இன்று காலை அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

பொது ஒழுங்கு பிரதி அமைச்சராக  விஜய தஹநாயக்கவும், மாகாணசபைகள், கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சராக சனத் ஜெயசூரியவும், தொழிற்பயிற்சி பிரதி அமைச்சராக  திலங்க சுமதிபாலவும், துறைமுகங்கள், கப்பல்துறை பிரதி அமைச்சராக எரிக் வீரவர்த்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஐவருக்கு அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்ட நிலையிலேயே புதிதாக நான்கு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *