மேலும்

நாள்: 21st May 2015

யாழ்.நகரில் கைது செய்யப்பட்ட 130 பேருக்கும் விளக்கமறியல்- அனுராதபுர சிறையில் அடைப்பு

யாழ்.நீதிமன்ற வளாகப் பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 130 பேரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வித்தியா கொலையைக் கண்டித்து கடையடைப்பு- முற்றாக முடங்கியது வவுனியா

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக் கோரியும், வவுனியா மாவட்டத்தில் இன்று முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

நான்கு அமைச்சர்கள் பதவி விலகினர் – பிரதமர் ரணில் மீது அதிருப்தி

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களே, தற்போதைய அரசாங்கத்தின் மீது கொண்ட அதிருப்தியால் பதவி விலகினர்.

சிறிலங்கா சிங்களவருக்கே சொந்தம்; தமிழருக்கு உரிமையில்லை – என்கிறது சிங்கள அமைப்பு

சிறிலங்கா சிங்களவருக்குரிய நாடு என்பதால், தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவம் நீக்கப்பட்ட சிங்களக்கொடியே நாட்டின் தேசியக்கொடியாகப் பயன்படுத்தவேண்டும் என்று சுவர்ண ஹங்ச பதனம என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பின் தலைவர் கால்லகே புண்ணியவர்தன தெரிவித்தார்.

அடுத்த மாதம் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை ஆரம்பம் – சிறிலங்கா அதிபர்

புதிய போர்க்குற்ற விசாரணை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று  ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாத்தறை அணிவகுப்பில் மைத்திரி மீது கல்வீச திட்டம்?- இரு கடற்படையினர் கைது

மாத்தறையில் நேற்று முன்தினம் நடந்த போர்வீரர்கள் நினைவு அணிவகுப்பின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மீது கல் வீசத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தில் இரண்டு கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வித்தியா படுகொலை விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை, சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.

பிரித்தானியத் தூதுவர் சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவுக்கான, பிரித்தானியாவின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஜேம்ஸ் டௌரிஸ் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கோத்தாவைப் பாதுகாக்கும் மகிந்த நியமித்த நீதியரசர்கள் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் அதிபராகப் போட்டியிடலாம் எனத் தீர்ப்பு வழங்கிய அதே உச்சநீதிமன்றமே தற்போது கோத்தபாய ராஜபக்சவைப் பாதுகாத்துள்ளது.