வித்தியா கொலையைக் கண்டித்து கடையடைப்பு- முற்றாக முடங்கியது வவுனியா
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக் கோரியும், வவுனியா மாவட்டத்தில் இன்று முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இந்தப் போராட்டத்தினால், வவுனியா நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள் முற்றாக அடைக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளன.
பாடசாலைகளும், அரச தனியார் செயலகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் வவுனியா மாவட்டம் முற்றாக செயலிழந்துள்ளது.
அதேவேளை, ஆங்காங்கே கண்டனப் பேரணிகளும் நடத்தப்பட்டன. வவுனியா நகரில், கண்டனப் பேரணி நடத்த முற்பட்ட போது, சிறிலங்கா காவல்துறையினர் எச்சரித்து பொதுமக்களைக் கலைத்தனர்.
இதனால் வவுனியா நகரப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இதற்கிடையே வித்தியா கொலைக்கு கண்டனம் தெரிவித்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பிலும் இன்று போராட்டங்கள் பல இடம்பெற்றுள்ளன.
பாடசாலை மாணவர்களும், பொது அமைப்புகளும் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பில்