பொறுப்புக்கூறல் நிலைப்பாட்டில் இருந்து விலகாது அமெரிக்கா – கூட்டமைப்பிடம் ஜோன் கெரி உறுதி
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள புதிய சூழலைத் தமிழர் தரப்பு, சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.