மேலும்

19வது திருத்தத்தை நிறைவேற்றிய சிறிலங்காவுக்கு பிரித்தானியா பாராட்டு

James Dauris -MS19வது அரசியலமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில், சிறிலங்காவுக்கான புதிய பிரித்தானியத் தூதுவர், ஜேம்ஸ் டௌரிஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இன்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் தனது நியமனக் கடிதத்தை, சிறிலங்கா அதிபரிடம் கையளித்த போதே அவர், இதுதொடர்பாக வாழ்த்துக் கூறியுள்ளார்.

சிறிலங்கா- பிரித்தானியா இடையே நீண்டகாலமாக நிலவிவரும் நெருக்கமான உறவுகளுக்கு மத்தியில், சிறிலங்கா அதிபர் அண்மையில் லண்டனுக்கு மேற்கொண்ட பயணத்துக்கும், பிரித்தானிய தூதுவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

James Dauris -MS

MS-new amb

அதேவேளை, இந்த நிகழ்வில், குரோசியா, பஹ்ரெய்ன், ஹங்கேரி,  பிரான்ஸ் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் தமது நியமனக் கடிதங்களை சிறிலங்கா அதிபரிடம் கையளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *