மேலும்

நௌருவில் உள்ள 3 இலங்கையர்கள் உள்ளிட்ட 5 பேர் கம்போடியாவில் குடியேற இணக்கம்

Nauru-refugeesநௌருவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், கம்போடியாவில் குடியேற்றப்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக, அகதிகளின் சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

கம்போடியாவில் குடியமர இணக்கம் தெரிவித்துள்ள ஏனைய இருவரும் மியான்மார் மற்றும் ஈரான் நாட்டவர்களாவர்.

அவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களை வில் குடியேற்றும், திட்டம் ஒன்றை அவுஸ்ரேலியா முன்னெடுத்துள்ளது.

இதற்கான இருதரப்பு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், நௌரவில் உள்ள தடுப்பு நிலையத்தில் உள்ள அகதிகளுக்கு சலுகைகளை வழங்கி, கம்போடியாவுக்கு அனுப்பும் முயற்சியில் அவுஸ்ரேலியா ஈடுபட்டுள்ளது.

முதலில் கம்போடியா செல்ல இணங்குவோருக்கு இலவச சுகாதார காப்பீடு, பணம், என்பன வழங்குவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

கம்போடியாவுக்கு செல்வோருக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம், 10 ஆயிரம் தொடக்கம், 15 ஆயிரம் வரையான அவுஸ்ரேலிய டொலரை வழங்கும் என்று அகதிகளுக்கான சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இன்று கம்போடியாவுக்கு அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, இவ்வாறு நௌருவில் உள்ள அகதிகளை கம்போடியாவுக்கு அனுப்பும் அவுஸ்ரேலியாவின் நடவடிக்கையை, அனைத்துலக மனித உரிமை அமைப்புகள், அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று கண்டித்துள்ளன.

சிறுவர்களின் உரிமைகளை அவுஸ்ரேலியா மீறுவதாக யுனிசெப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நௌருவில் உள்ள அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில், 718 அகதிகள் உள்ளனர். அவர்களில்,485 பேர் உண்மையான அகதிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளனர்.

83 பேரின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், 150 பேர் குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *