சிறிலங்கா, இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தயார் – சீனா
சிறிலங்கா, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன், இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பாதுகாப்பு கலந்துரையாடல் வரும் 8ஆம் – 9ஆம் நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், சீனாவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
பிஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங்,
“தொடர்புக் கொள்கையை வலுப்படுத்தவும், அவர்களின் அபிவிருத்தி மூலோபாயங்களை அடையாளம் காணவும், பரஸ்பரம் நன்மையளிக்கும் ஒத்துழைப்புக்கான வழிகளைக் கண்டறியவும், பிராந்திய, நாடுகள், மற்றும் பொதுமக்களின் பொதுவான நன்மை கருதியும், சிறிலங்கா, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன், இணைந்து பணியாற்ற சீன தயாராக இருக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.