சிறிலங்கா அதிபரின் சகோதரர் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு படுகாயம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான, பிரியந்த சிறிசேன இன்று மாலை இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், பொலன்னறுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றுமாலை 7 மணியளவில், பொலன்னறுவ, ஹத்தரே எல பகுதியில், உள்ள அவரது வாகனத் திருத்தகத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூரிய ஆயுதம் ஒன்றினால் தலையின் பின்புறத்தில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த அவர், உடனடியாக, பொலன்னறுவ மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும், உலங்குவானூர்தி மூலம், கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தை் சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.