இந்தியப் பிரதமரிடம் மன்னார் ஆயர் கையளித்த மனு
தலைமன்னார் இறங்குதுறைக்கு நேற்று வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகையினால், மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் துறையில் இருந்து மதவாச்சி வரை அமைக்கப்பட்ட புதிய தொடருந்துப் பாதையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடருந்துச் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
தலைமன்னார் துறை தொடருந்து நிலையத்தில் நினைவுக்கல்லைத் தறந்து வைத்த மோடி, பச்சைக் கொடியை அசைத்து அங்கிருந்து முதுலாவது தொடருந்து சேவையை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, இந்தியப் பிரதமரிடம் அவர் மனு ஒன்றையும் கையளித்துள்ளார்.