நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறது பொது பலசேனா
அரசியலில் நுழைவது குறித்து தாம் ஆலோசித்து வருவதாகவும், வரும் ஏப்ரலுக்குப் பின்னர் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடக் கூடும் என்று, பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
“அரசியலில் பிரவேசிக்குமாறு பலமுறை எனக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அத்த வேண்டுகோள்களை நான் தீவிரமாக ஆராய்ந்து வருகிறேன். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடும்.
சில அச்சு ஊடகங்கள் இனவாதத்தைப் பரப்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் கண்டிக்கத்தக்கது.
சிறிலங்காவின் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் எந்த நகர்வையும், பொது பலசேனா எதிர்க்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.