மேலும்

அடுத்தமாத இறுதியில் சீனா, பாகிஸ்தான் செல்கிறார் மைத்திரி

Maithripala_Sirisenaசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பதவியேற்ற பின்னர், முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்ட நிலையில், அடுத்து, சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அடுத்த மாதம் 26ம் நாள் தொடக்கம், நான்கு நாட்கள் சீனாவில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

அதையடுத்து, சீனத் தலைநகர் பீஜிங்கில் இருந்து, மைத்திரிபால சிறிசேன வரும் 30ம் திகதி பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம், 13ம் நாள் தொடக்கம் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட இராஜதந்திர உறவுகளைச் சமநிலைப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே, இந்தியாவின் போட்டி நாடுகளான சீனா, பாகிஸ்தானுக்கு சிறிலங்கா அதிபர் அடுத்தகட்டப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *