மேலும்

வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகசுந்தரசுவாமி காலமானார்

kanakasundarasamyதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி (வயது-67) இன்று மாலை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்றுமாலை அங்கு மரணமானார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம சேவையாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற கனகசுந்தரசுவாமி, கடந்த 2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர், கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பொது அமைப்புக்களின் ஊடாக, சமூக சேவைகளை மேற்கொண்டு மக்களின் நன்மதிப்பையும் கௌரவத்தையும் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *