மேலும்

மைத்திரியிடம் இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – இரா.சம்பந்தன் கோரிக்கை

R.sampanthan13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, புதுடெல்லிக்கு நாளை அதிகாரபூர்வ பயணத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், இதுகுறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார் இரா.சம்பந்தன்.

சிறிலங்கா அதிபரும், இந்தியப் பிரதமரும் புதுடெல்லியில் நடத்தவுள்ள பேச்சுக்கள் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு, கொழும்புக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *