கோத்தாவிடம் இரண்டு மணி நேரம் விசாரணை
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அவன்ட் கார்டே என்ற நிறுவனத்தினால் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களை வைத்திருந்தது, மற்றும் ரக்ன லங்கா பாதுகாப்புச் சேவை நிறுவனத்தினால் ஆயுதக் களஞ்சியங்களை வைத்திருந்தது தொடர்பாகவே இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
சுமார் இரண்டு மணிநேரம் கோத்தாபய ராஜபக்சவிடம் விசாடிரணை நடத்தப்பட்டு, அவரிடம் இருந்து வாக்கு மூலம் பெறப்பட்டதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சார் அஜித் ரோகண தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பான எதிர்கால விசாரணைகளின் போது தேவையான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க கோத்தாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்ததாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.