தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் மோடியின் வாழ்த்துச் செய்தி
சிறிலங்காவின் 67வது சுதந்திர நாளையொட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை மக்களுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார்.
இதில்,“இலங்கை மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான நமது உறவு பிரிக்க இயலாத ஒன்றாகும்.” என தமிழில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். இம்மாதத்தின் பிற்பகுதியில் இந்தியா வரவுள்ள ஜனாதிபதி சிரிசேனா அவர்களை வரவேற்க ஆவலாக உள்ளேன்.” என்றும் அவர் இன்னொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமரின் இந்த வாழ்த்துச் செய்தி மூன்று மொழிகளிலும் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.