மகிந்தவிடம் இருந்து 27 வது நாடாளுமன்ற உறுப்பினரும் பிரிந்து சென்றார்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் இன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் இன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை அவுஸ்ரேலிய அதிகாரிகள் கவனமாக, அவதானித்து வருவதாக, சிட்னி மோர்னிங் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்தவாரம் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் பயமுறுத்தும், நடவடிக்கைக்கு சிறிலங்கா இராணுவத்தை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்துவதாக அனைத்துலக சமூகத்திடம் முறையிட்டுள்ளது எதிரணி.
யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை, “திரு.பிரபாகரன்” (மிஸ்டர் பிரபாகரன்) என்று குறிப்பிட்டது, அரசதரப்புக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விலகிக் கொள்ளவுள்ளதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்த தான் நடவடிக்கை எடுப்பேன் என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதி உயர்கல்வி அமைச்சராக பதவி வகித்த நந்திமித்ர எக்கநாயக்கவும், இன்று எதிரணிக்குத் தாவியுள்ளார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரான குமார் மஹத்தயா என்று அழைக்கப்படும் குமார் குணரத்தினம் இன்று அதிகாலை சிறிலங்கா வந்தடைந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த, சீன மற்றும் ஜப்பானிய மீன்பிடிக் கப்பல்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபரை நாடிச்சென்று, அவர் தம் சகோதரர்களுக்குப் பல்லிளித்து, வாழ்வதற்காக தமிழ் மக்கள் போராட்டம் நடத்தவோ, உயிர்த் தியாகங்களைச் செய்யவோ இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.