மேலும்

மகிந்தவிடம் இருந்து 27 வது நாடாளுமன்ற உறுப்பினரும் பிரிந்து சென்றார்

Achala Suranga Jagodaஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் இன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவருமான ஆச்சல சுரங்க ஜாகொடவே இன்று மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளார்.

கொழும்பில் ஐதேக தலைமையகத்தில் இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த முடிவை அறிவித்தார்.

இவர் முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இதுவரை 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியின் பக்கம் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *