சிறிலங்கா வந்தார் குமார் குணரத்தினம்
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரான குமார் மஹத்தயா என்று அழைக்கப்படும் குமார் குணரத்தினம் இன்று அதிகாலை சிறிலங்கா வந்தடைந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேவிபியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான குமார் குணரத்தினம், அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வந்தார்.
கடந்த 2011ம் ஆண்டு, போலி பெயருடன் அவுஸ்ரேலிய கடவுச்சீட்டில் சிறிலங்கா வந்த அவர், ஜேவிபியின் முக்கிய உறுப்பினர்களை இணைத்து, முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கியிருந்தார்.
எனினும், 2012ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடுகடத்தப்பட்ட அவர் இன்று காலை 12.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக சிறிலங்கா வந்து சேர்ந்துள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இவர் இன்று முதல்முறையாக ராஜகிரியவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளார்
எதிரணியின் வாக்குகளை சிதறடிக்கும் திட்டத்துடனேயே சிறிலங்கா அரசாங்கம் குமார் குணரத்தினத்துக்கு நுழைவிசைவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.