மேலும்

கொழும்பு திரும்பிய சம்பந்தன் கூட்டமைப்பு பிரமுகர்களுடன் ஆலோசனை

sampantharமூன்று வாரங்களாக இந்தியாவில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று கொழும்பு திரும்பியதை அடுத்து, சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு விரைவில் வெளியிடப்படும் என்று தெரியவருகிறது.

நேற்றுக்காலை இரா.சம்பந்தன் நாடு திரும்பியதையடுத்து, கொழும்பில் நேற்றுமாலை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் தேர்தல் குறித்தும், வேட்பாளர்களின் நிலை குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இரண்டொரு நாட்களுக்குள்,கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *