மேலும்

முடிவெடுத்தது முஸ்லிம் காங்கிரஸ் – இன்று அறிவிப்பு வெளியாகும்?

Sri_Lanka_Muslim_Congressசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு, எதிர்வரும் அதிபர் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான முடிவு கட்சியின் உயர்பீடத்துக்கு இன்று தெரியப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதுதொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரு வேட்பாளர்களினதும் தேர்தல் அறிக்கைகளை ஆய்வு செய்த பின்னர் தமது முடிவு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

இன்று சிறிலங்கா அதிபரின் தேர்தல் அறிக்கை வெளியாகவுள்ளது.

எனினும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

எனினும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் இந்த முடிவுக்கு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டுப்படுவார்களா என்ற கேள்வி உள்ளது.

அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக, தமது கட்சிக்குள் முரண்பாடான கருத்துகள் இருப்பதாக, அமைச்சர் ஹக்கீம் நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *