மேலும்

சிறிலங்காவுக்கு இரு போர்க்கப்பல்களை விற்கிறது இந்தியா

India-srilanka-Flagசிறிலங்காவுக்கு இரண்டு போர்க்கப்பல்களை இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளதாக, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால், ஏற்றுமதி செய்யப்படும் முதலாவது போர்க்கப்பலை, கையளிக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் ஒன்று முதல் முறையாக மொறிசியசுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இன்று இந்த போர்க்கப்பலை கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர். ராவ் இந்திரஜித் சிங், இரண்டு ஆழ்கடல்ரோந்துக் கப்பல்களுக்கு சிறிலங்காவிடம் இருந்து கொள்வனவுக்கட்டளை வந்துள்ளது.

இவை தற்போது கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை.

வேறு எந்த நாட்டின் தொழில்நுட்ப உதவிகளோ கருவிகளோ இவற்றில் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *