ஹோலோகிராம் தொழில்நுட்பத்தில் மகிந்த பரப்புரை – சிறிலங்கா வரலாற்றில் முதல் முறை
சிறிலங்காவின் வரலாற்றில் தேர்தல் பரப்புரைகளுக்கு முதன்முறையாக, முப்பரிமாணத் தோற்றத்தை அளிக்கும், ஹொலோகிராம் தொழில்நுட்பம் (Hologram technology) பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல பரப்புரை மேடைகளில் உரையாற்றி வருகிறார்.
கடந்த மே மாதம் இந்தியாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.