“ஜனவரி 8க்குப் பின்னரும் நானே சிறிலங்கா அதிபர்” – என்கிறார் மகிந்த
வரும் ஜனவரி 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னரும் தானே சிறிலங்கா அதிபராகத் தொடர்ந்து நீடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.
எம்பிலிப்பிட்டியவில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“அதிபர் தேர்தலுக்காக, எதிரணியினரைப் போல, ஆளும்கட்சி உறுப்பினர்களுடன் பல்வேறு புரிந்துணர்வு உடன்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டிய தேவை எனக்கு இல்லை.
தமக்கு ஆதரவளிப்பதற்காக, பல்வேறு கட்சிகள் அமைப்புகளுடன் உடன்பாடு செய்து கொண்டிருக்கிறார் எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.
எனது அரசாங்கத்தில் உள்ளவர்களை அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர்.
எனவே அவர்களுடன் தனித்தனியாக உடன்பாடு செய்து கொள்ள வேண்டிய தேவை எனக்கு கிடையாது.
ஜனவரி 8ம் நாளுக்குப் பின்னரும் நானே சிறிலங்காவின் அதிபராக நீடிப்பேன்.
இந்த தேர்தலில் நான் வெற்றி பேறுவேன் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.