பொன்சேகாவை வீழ்த்திய அன்னம் மைத்திரியை காப்பாற்றுமா?
சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா தேர்தல் செயலகத்தில் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார்.
இதன்படி, புதிய ஜனநாயக முன்னணியின், வேட்பாளராக அன்னப்பறவை சின்னத்தில் மைத்திரிபால சிறிசேன அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2010ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா, புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் அன்னப்பறவை சின்னத்திலேயே மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.