மேலும்

37 அகதிகளுடன் படகை சிறிலங்கா கடற்படையிடம் இரகசியமாக ஒப்படைத்தது அவுஸ்ரேலியா

boatஅவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற போது, இந்தோனேசியக் கடற்பரப்பில் வைத்து அவுஸ்ரேலியக் கடலோரக் காவற்படையால் கைது செய்யப்பட்ட 37 இலங்கையர்கள் நேற்று சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 1ம் நாள்  37 இலங்கை அகதிகளுடன் சென்ற படகு ஒன்று இந்தோனேசியாவுக்கு அருகே அவுஸ்ரேலிய கடலோரக் காவல்படையால் தடுக்கப்பட்டது.

மிகவும் இரகசியமான முறையில் தடுத்து வைத்திருந்த இந்தப் படகை அவுஸ்ரேலியக் கடலோரக் காவல்படை, சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.

சிறிலங்கா கடற்படையினர் இவர்களை நேற்று சிறிலங்காவுக்கு கொண்டு வந்து, சிறிலங்கா காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர்களில் 13 சிங்களவர்களும், 23 தமிழர்களும், ஒரு பறங்கியருமாவார்.

ஒன்பது மாதம் தொடக்கம் 10 வயதுக்கு இடைப்பட்ட ஆறு சிறுவர்களும் இதில் அடங்கியுள்ளனர்.

இந்தப் படகில் பிடிபட்ட தமிழர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *