மேலும்

காங்கேசன் கடற்படை இல்லத்தில் சரத் என் சில்வா – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

sarath n silvaசிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிறிலங்கா கடற்படை இல்லத்தில் தங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான எதிரணியின் முயற்சிகளில் முக்கிய பங்கை வகித்து வருபவர் சரத் என்.சில்வா.

அவர் சிறிலங்கா கடற்படையின் இல்லத்தில் தங்கியிருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

சரத் என் சில்வாவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு முகவரகத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன் டி சில்வாவும் காங்கேசன்துறையிலுள்ள கடற்படை இல்லத்தில் தங்கியுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்றிரவு உறுதிப்படுத்தியுள்ளது.

கடற்படை இல்லத்தில், சிறிலங்கா அதிபர், மூத்த இராணுவ அதிகாரிகள், மற்றும் அவர்களின் விருந்தினர்கள் மாத்திரமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவது வழக்கமாகும்.

எனினும், அங்கு தங்குவதற்கு சரத் என்.சில்வா சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தின் அனுமதியைப் பெற்றுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *