விலகிச் சென்றவர்கள் பற்றிய ஆவணங்கள் கையில் உள்ளதாம் – மிரட்டுகிறார் மகிந்த
சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்றவர்கள் பற்றிய ஆவணக் கோப்புகள் தன்னிடம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
புதிதாக அமைக்கப்பட்ட அனுராதபுர- திருகோணமலை வீதியை இன்று திறந்து வைத்து உரையாற்றிய அவர்,
அரசாங்கத்தின் கதவு சிகையலங்கார நிலையத்தின் கதவு போல எல்லோருக்காகவும் திறந்திருக்கும்.
இங்கு யாரும் உள்ளே வரலாம், யாரும் வெளியே போகலாம்.
முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியே சென்றனர், பின்னர் மீளவும் இணைந்து கொண்டனர். ஆனால் நான் அப்படியல்ல.
சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குள்ளேயும் அரசாங்கத்திலும், சுதந்திரம் உள்ளது. அதனை எவரும் அனுபவிக்கலாம்.
அரசாங்கத்தை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு ஒன்றை மட்டும் கூறுகிறேன்.
அவர்களைப் பற்றிய ஆவணக்கோப்புகள் என்னிடம் உள்ளன.
ஆனால் அவற்றை நான் பயன்படுத்தமாட்டேன். நான் அத்தகைய மனிதர் அல்ல.” என்றும் தெரிவித்துள்ளார்.